தூத்துக்குடி: மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மாநில அளவிலான மகளிர் செஸ் போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சி மாவட்ட சதுரங்க கழகம் சார்பில் கோவிலப்ட்டி நேஷனல் இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது. இப்போட்டியில் சர்வதேச தரவரிசை பட்டியலில் இடம்பெற்ற 90 போட்டியாளர்கள் உட்பட 178 பேர் பங்கேற்றுள்ளனர். 9 சுற்றுகளாக நடைபெறும் இப்போட்டி நாளை மறுநாள் வரை நடைபெறுகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் 4 நபர்கள் தேசிய அளவிலான போட்டியில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day