மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் கூடு கட்டியுள்ள தேனீக்கள் - அப்புறப்படுத்த நோயாளிகள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மயிலாடுதுறை அரசு தலைமை மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் கூடு கட்டி உள்ள தேனீக்களை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் 7வது மாடியில் மகப்பேறு மற்றும் பச்சிளங்குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பிரசவங்கள் நடைபெற்று வரும் நிலையில், கட்டடத்தின் ஒரு பகுதியில் உள்ள தேன்கூட்டில் ஆயிரக்கணக்கான தேனீக்கள் உள்ளன. குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் ஏராளமான குழந்தைகள் சிகிச்சை பெற்று வரும் நிலையில், இந்த தேனீக்கள் கொட்டினால் குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக முடியும் நிலை உள்ளது. எனவே விரைவாக தேன் கூட்டை வேறு இடத்திற்கு அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day