ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,560 உயர்வு - ரூ.98,960-க்கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபர தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் உயர்ந்து 98 ஆயிரத்து 960 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு காலை ஆயிரத்து 600 ரூபாய் உயர்ந்த நிலையில், மீண்டும் பிற்பகலில் சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்தது. இதன்மூலம் ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்து 560 ரூபாய் அதிகரித்து 98 ஆயிரத்து 960 ரூபாய்க்கும், ஒரு கிராம் 320 ரூபாய் உயர்ந்து 12 ஆயிரத்து 370 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

இதேபோல் வெள்ளியின் விலை காலை கிராமுக்கு 6 ரூபாய் உயர்ந்த நிலையில் பிற்பகல் மேலும் ஒரு ரூபாய் அதிகரித்து 216 ரூபாய்க்கும், ஒரு கிலோ 7 ஆயிரம் ரூபாய் உயர்ந்து 2 லட்சத்து 16 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது. 

தங்கம் விலை கடந்த சில நாட்களாக சிறுக சிறுக உயர்ந்து வந்த நிலையில், இன்று ஒரே நாளில் 2 ஆயிரத்து 560 ரூபாய் உயர்ந்துள்ளது நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Night
Day