வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவர் : போலீசிடம் ஒப்படைத்த பொதுமக்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவரை பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

வண்ணாத்தி குட்டை பகுதியை சேர்ந்த நடராஜன் என்பவர் கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மணி என்பவருடன் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் லைட் எரிவதை கண்டு அதிர்ச்சியடைந்து உள்ளே சென்று பார்த்தபோது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து திருடி கொண்டிருந்தனர். இதனை கண்ட மணி சத்தமிட்டதால் மர்ம நபர்கள் அவரை தாக்கி விட்டு தப்ப முயன்றபோது பொதுமக்கள் அவர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், ஏற்காடு பகுதியை சேர்ந்த கருணாகரன் மற்றும் விஜய் என தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day