ராமநாதபுரம் : அரசு பள்ளி கிடங்கில் வைத்திருந்த நோட்டு புத்தகங்கள் திருட்டு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் வைக்கப்பட்டிருந்த நோட்டு புத்தகங்களை மர்ம நபர்கள் ஆட்டோவில் கொள்ளையடித்து சென்றதாக மாவட்ட கல்வி அலுவலர் போலீசில் புகார் தெரிவித்துள்ளார். 

அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்குவதற்காக நோட்டுப் புத்தகங்கள் சக்கரக்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று நள்ளிரவு மர்ம நபர்கள் நோட்டு புத்தகங்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் ஜன்னல் கம்பிகளை உடைத்து உள்ளே சென்று லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நோட்டு புத்தகங்களை ஆட்டோவில் ஏற்றி திருடி சென்றதாக மாவட்ட கல்வி அலுவலர் சுதாகர் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Night
Day