சென்னை : மென்பொறியாளர் வீட்டில் 60 சவரன் தங்க நகைகள், ரூ.50,000 கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அடுத்த பழைய பல்லாவரத்தில் மென்பொறியாளர் வீட்டின் பூட்டை உடைத்து 60 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பல்லவா கார்டன் 8-வது தெருவை சேர்ந்த மென்பொறியாளர் குமரன் தனது குடும்பத்தினருடன் துக்க நிகழ்ச்சிக்காக வெளியூர் சென்ற நிலையில் அவரது வீட்டின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். குமரன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக அவரது பணிப்பெண் கொடுத்த தகவலின்படி சொந்த ஊர் திரும்பிய குமரன் உடனடியாக சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது 2 இளைஞர்கள் கம்பியால் பூட்டை உடைத்து உள்ளே நுழைவது தெரிந்துள்ளது. இதுகுறித்த புகாரின்பேரில் பல்லாவரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Night
Day