சவுக்கு சங்கர் வந்த காவல்துறை வாகனம் விபத்துக்குள்ளான சம்பவம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் கடந்த 4-ஆம் தேதி சவுக்கு சங்கரை அழைத்து வந்த காவல்துறை வாகனம் விபத்திற்குள்ளான காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பேசிய புகாரில், கடந்த 4ஆம் தேதி தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கோவை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். பின்னர், காவல்துறை வாகனம் மூலம் அவரை கோவைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தாராபுரம் ஐடிஐ சந்திப்பு அருகே தெக்கலூர் பகுதியைச் சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டிச்சென்ற கார் மீது காவல்துறை வாகனம் மோதியது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Night
Day