திண்டுக்கல்: பிரத்யேக ஆதார் முகாம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் ஆதார் மையம் இல்லாததால் பிரத்யேக முகாம்கள் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நிலக்கோட்டை தாலுகாவில் சுமார் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இம்மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான ஆதார் அட்டை எடுப்பதற்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பிரத்யேக ஆதார் மையம் செயல்பட்டு வந்தது. பணியாளர்கள் பற்றாக்குறையால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆதார் மையம் மூடப்பட்டதால் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். தற்போது மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற உள்ளதால் ஆதார் அட்டை எடுப்பதற்கு பிரத்யேக முகாம்கள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Night
Day