மூதாட்டி கொலை வழக்கு - தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

பரமத்தி வேலூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள தோட்டத்தில் சாமியாத்தாள் என்ற மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டின் வெளியே கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த , மர்ம நபர்கள் இருவர் சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பி ஓடிவிட்டனர். படுகாயமடைந்து ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவலறிந்து வந்த நல்லூர் காவல்துறையினர் மாவட்ட காவல்துறை எஸ்.பி. உள்ளிட்டோர் கொலை செய்யப்பட்ட இடத்தை ஆய்வு செய்தனர். இந்நிலையில் மூதாட்டியை கொலை செய்த குற்றவாளிகளை பிடிக்க பரமத்தி வேலூர் டி.எஸ்.பி சங்கீதா தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Night
Day