கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் மறைவு - புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பூர் தெற்கு தொகுதி, கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் மறைவுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், திருப்பூர் தெற்கு தொகுதி, கழக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சு.குணசேகரன் இயற்கை எய்தினார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றதாக தெரிவித்துள்ளார். குணசேகரனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், கழகத் தொண்டர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டி கொள்வதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.

varient
Night
Day