எழுத்தின் அளவு: அ+ அ- அ
தமிழகத்தில் வருகிற 10ம் தேதி 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வரும் 10ம் தேதி திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து 11ம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 12ம் தேதி கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 13, 14 ஆகிய தேதிகளில் கோயம்புத்தூர், நீலகிரி, திருநெல்வேலி, தேனி, தென்காசி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.