திண்டுக்கல் : கோயில் திருவிழாவுக்குச் சென்ற அக்கா, தங்கைக்கு பாலியல் வன்கொடுமை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திண்டுக்கல் அருகே காதலர்களுடன் கோயில் திருவிழாவிற்கு சென்ற இளம் பெண்கள் இருவர், காதலர்கள் கண்முன்னே கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தை உளுக்கியுள்ளது. இச்சம்பவத்தில் ஈடுபட்ட கொடூர கயவர்கள் யார்? காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை என்ன? என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

திண்டுக்கல் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதிக்கு 19, 17, 13 வயதில் 3 மகள்கள் உள்ளனர். அதில், மூத்த பெண்ணுக்கு திருமணமாகி கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பெற்றொருடன் வசித்து வருகிறார். கணவரை பிரிந்து வாழும் மூத்த பெண்ணுக்கும், 2வது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவருடன் தொடர்பு ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மலர்ந்துள்ளது.

இரு இளம் காதல் ஜோடிகளும், கடந்த மாதம் 30ம் தேதி இடையகோட்டையில் நடைபெற்ற கோயில் திருவிழாவில் பங்கேற்றுவிட்டு மீண்டும் வீடு திரும்பிய போது வழியில் இருந்த ஹோட்டல் ஒன்றில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். 

சாப்பிட்டு முடித்து விட்டு சகோதரிகள் இருவரும் ஹோட்டலில் எதிரே இருக்கும் மரத்தடியில் தங்கள் காதலர்களுக்காக காத்திருந்தனர். அப்போது, கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையில், செய்வதறியாது இருசக்கர வாகனங்களில் சுற்றிக்கொண்டிருந்த மீனாட்சி நாயக்கன்பட்டியை சேர்ந்த சரண்குமார், முத்தழகுபட்டியை சேர்ந்த வினோத்குமார், முருகபவனத்தை சேர்ந்த சூரியபிரகாஷ் ஆகியோர் சகோதரிகள் இருவர் நின்று கொண்டிருப்பதை கண்டு வண்டியை நிறுத்தியுள்ளனர். அவர்களிடம், ஏன் இங்கு வந்தீர்கள், யாருடன் வந்தீர்கள் என்று விசாரித்துள்ளனர். இளம்பெண்கள் இருவரும் ஹோட்டலில் இருந்து வெளியே வந்த தங்கள் காதலர்களை காட்டி அவர்களுடன் தான் வந்தோம் என கூறியுள்ளனர்.

கஞ்சா போதையில் இருந்த மூன்று பேரில் ஒருவர், தங்கள் கூட்டத்தின் தலைவன் சுள்ளான் என்ற பிரசன்ன குமாரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு, 2 இளம்பெண்கள் சிக்கியுள்ளதாகவும், அவர்களை அழைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து, காதலர்கள் இருவரையும் கடுமையாக தாக்கி கத்தி முனையில் 4 பேரையும் இருசக்கர வாகனங்களில் அழைத்துக் கொண்டு தாமரைக்குளம் பகுதிக்கு சென்றனர். 

அங்கு, சென்றபின் காதலர்கள் இருவரையும் கயிற்றால் கட்டிப்போட்டுவிட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த சுள்ளான் என்கிற பிரசன்ன குமாருடன் சேர்ந்து காதலர்கள் இருவரின் கண்முன்னே இளம்பெண்களை விடிய, விடிய கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சித்ரவதை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இளம்பெண்களின் புகார் பேரில் சரண்குமார், வினோத் குமார், சூரிய பிரகாஷ் ஆகியோர் 3 பேரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள், இருசக்கர வாகனம், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இக்கொடூர கூட்டத்தின் தலைவனாக செயல்பட்ட சுள்ளான் என்ற பிரசன்ன குமார் தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். 

விளம்பர அரசின் ஆட்சியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்து வரும் நிலையில், இளைஞர்கள் பலரும் அப்பழக்கத்திற்கு அடிமையாக பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில், 4 பேர் கொண்ட கும்பல் கஞ்சா போதை தலைக்கு ஏறிய நிலையில் சகோதரிகள் இருவரை விடிய விடிய பாலியல் தொல்லை அளித்துள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Night
Day