மக்களவைத் தேர்தல் : ஜார்கண்டில் முதன் முறையாக வாக்களிக்கவுள்ள 92 வயது முதியவர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜார்கண்டை சேர்ந்த 92 வயது முதியவர் வருகிற மக்களவைத் தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்கவுள்ளார். ஜார்கண்ட் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரி ரவிக்குமார் என்பவர் அம்மாநிலத்திலுள்ள பத்தோரி எனும் கிராமத்திற்கு சென்று நேரடி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, வாக்காளர் பட்டியலில் பெயரில்லாமல், தன் வாழ்நாளில் ஒரு முறை கூட வாக்களிக்காத அன்சாரி எனும் 92 வயது மாற்றுத்திறனாளியை சந்தித்தார். உடனடியாக அவரது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்குமாறு உள்ளாட்சி தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதனையடுத்து, மாநிலத்தேர்தல் அதிகாரிக்கு மனம் நெகிழ்ந்து நன்றி தெரிவித்த அன்சாரி, தான் வருகிற மக்களவைத் தேர்தலில் வாக்களிப்பதாக உறுதியளித்தார்.

Night
Day