கல்குவாரி அமைப்பது தொடர்பாக சகோதரி மீது திமுக எம்எல்ஏ குடும்பத்தினர் தாக்குதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கல்குவாரி விவகாரம் தொடர்பாக திமுக எம்எல்ஏவின் சகோதரி அளித்த புகாரின் அடிப்படையில் திமுக எம்எல்ஏவின் மனைவி மற்றும் மகன் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

மதுரை வடக்கு தொகுதி திமுக எம்எல்ஏ கோ.தளபதியின் சகோதரி காந்திமதி, திருமங்கலம் அருகே உள்ள வடகரை புதூரில் கல்குவாரி நடத்தி வருகிறார். இவரது குவாரி அருகே திமுக எம்எல்ஏ தளபதி 
புதிதாக குவாரி அமைக்க உள்ளதை அறிந்த காந்திமதி, திமுக எம்எல்ஏவின் வீட்டுக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது காந்திமதியையும், அவரது மகளையும் தளபதியின் மனைவி, மகன் ஆகியோர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து, எம்.எல்.ஏ தளபதியின் மனைவி வீரலட்சுமி, மகன் துரை கோபால்சாமி ஆகியோர் மீது திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் காந்திமதி புகார் அளித்தார். அதன்பேரில் எம்எல்ஏவின் மனைவி மற்றும் மகன் மீது 4 பிரிவின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

Night
Day