கோவையில் பள்ளி ஆசிரியர் வீட்டில் 103 சவரன் நகை கொள்ளை

எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே வீட்டின் பூட்டை திறந்து 103 சவரன் நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஐயப்பா நகர் பகுதியில் வசித்து வரும் ஜெபா மார்ட்டின் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு திரும்பிய போது, வீட்டின் பூட்டை திறக்கப்பட்டு, பீரோவில் இருந்த 103 சவரன் நகை மற்றும் பணம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து குனியமுத்தூர் போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். வீட்டின் பூட்டை உடைக்காமல் கதவை திறந்து சென்று நகையை கொள்ளையடித்திருப்பதால், நெருக்கமான நபர்கள் யாராவது இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Night
Day