இன்ஸ்டாகிராம் மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை - 2 இளைஞர்கள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் இன்ஸ்டாகிராம் மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்த இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.


கே.கே நகர் பகுதியில் இன்ஸ்டாகிராம் மூலம் வலி நிவாரணி மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தீவிர சோதனையில் ஈடுபட்ட போலீசார் சைதாப்பேட்டையைச் சேர்ந்த கார்த்திகேயன், நெசப்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ் ஆகிய 2 இளைஞர்களை கைது செய்தனர்.  அவர்களிடமிருந்து ஆயிரத்து 200 மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Night
Day