போலி பட்டா தயாரித்து நிலத்தை அபகரித்த திமுக பிரமுகர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவையில் திமுக நிர்வாகி போலி பட்டா தயாரித்து அபகரித்த நிலத்தை கோட்டாட்சியர் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

குமாரபாளையம் கிராமத்தில் உள்ள சற்குணன் என்பவரின் 36.5 செண்ட் நிலத்தை கோவை வடக்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி தலைவர் விஸ்வநாதன் போலி பட்டா மூலம் அபகரித்து தன் பெயருக்கு மாற்ற முயன்றுள்ளார். இதுகுறித்து கேட்டதால் அடியாட்களை வைத்து சற்குணனை தாக்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக சற்குணன் அளித்த புகாரை விசாரித்த கோட்டாட்சியர் திமுக பிரமுகர் தயாரித்த போலி பட்டாவை ரத்து செய்து அந்த நிலத்தை மீட்டு சற்குணனுக்கு வழங்கி ஆணை பிறப்பித்துள்ளார்.

Night
Day