இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா விண்வெளி பயணம் 6வது முறையாக ஒத்திவைப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லாவின் விண்வெளி பயணம் 6வது முறையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாசா எனப்படும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துடன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் இணைந்து, ‘ஆக்ஸியம் மிஷன்- 4’ என்ற திட்டத்தின் கீழ்,  ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்ப உள்ளது. 

அந்த வகையில், நாசாவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் செல்ல இருந்த பயணம் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 

இந்த பயணம் முதலில் மே 29ம் தேதி தொடங்குவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக அன்று பயணம் ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து ஜூன்.8,10,11 ஆகிய தேதிகளில் விதவிதமான பிரச்னைகள் உருவானதால் பயண திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. 

அந்த வகையில் ஆறாவது முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்லும் ஆக்சியம் 4 திட்டம் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ISS-இல் ஸ்வெஸ்டா சேவை தொகுதியின் பின்புறப் பகுதியில் சமீபத்தில் செய்யப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகளைத் தொடர்ந்து, மதிப்பீடு செய்ய அதிக நேரம் தேவைப்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இதனிடையே, அனைத்து மருத்துவ மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளைப் பராமரிக்க, மே 14 முதல் சுபான்ஷு சுக்லா அடங்கிய 4 பேர் கொண்ட குழு புளோரிடாவில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். லிஃப்ட்-ஆஃப் செய்வதற்கான நேரம் ஜூன் 30 வரை திறந்திருக்கும். ஆனால், ஏதேனும் காரணத்தால், காலக்கெடு தவறவிட்டால், ஜூலை மாத நடுப்பகுதியில் மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Night
Day