எழுத்தின் அளவு: அ+ அ- அ
அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 198 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையம் அருகே, ஏர் இந்தியா விமானம் கடந்த 12ம் தேதி விழுந்து நொறுங்கிய விபத்தில் பயணி ஒருவர் தவிர, 241 பேர் உயிரிழந்தனர். விமானம் விழுந்த மருத்துவக் கல்லுாரி விடுதியில், 29 பேர் உயிரிழந்தனர். விமானம் தீப்பிடித்து எரிந்ததால், பலியான உடல்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவியது. இதனால், டி.என்.ஏ., எனப்படும் மரபணு சோதனை வாயிலாக உடல்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், இதுவரை 215 உடல்கள் அடையாளம் காணப்பட்டு, 198 உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இதில், 149 பேர் இந்தியர்கள், 32 பிரிட்டிஷார், 7 பேர் போர்த்துக்கீசியர்கள், ஒருவர் கனடாவை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விடுதி வளாகத்தில் இறந்த 9 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.