புதுச்சேரி : கடலில் சுற்றுலா பயணிகள் குளித்தபோது விபரீதம் - ராட்சத அலையில் சிக்கி 2 பேர் உயிரிழப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

புதுச்சேரிக்கு பொங்கல் விடுமுறையை கொண்டாட வந்த வால்பாறையை சேர்ந்த ஒன்பது இளைஞர்கள் கடலில் குளித்த போது ராட்சத அலையில் சிக்கி இருவர் 
இழுத்து செல்லப்பட்டதில் ஒருவரது உடல் கரை ஒதுங்கியது. மாயமான மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர். பொங்கல் விடுமுறையை யொட்டி கோவை மாவட்டம் வால்பாறையில் இருந்து 9 இளைஞர்கள் புதுச்சேரிக்கு நேற்று காலை சுற்றுலா வந்தனர். அவர்கள் நேற்று மதியம் ஒரு மணி அளவில் குருசுகுப்பம் பகுதி கடலில் குளித்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் 2 பேர் இழுத்துச் செல்லப்பட்டனர். இதில் வினோத் என்கிற இளைஞரின் 
உடல் தலைமைச் செயலகம் எதிரே உள்ள கடற் பகுதியில் ஒதுங்கியது. மேலும் இழுத்துச் செல்லப்பட்ட அசோக் குமார் என்பவரை கடலோர காவல் துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் தேடி வருகின்றனர். 

Night
Day