தமிழக எம்.பி-எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்ற விவரங்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் - தகவல் ஆணையம் உத்தரவு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக எத்தனை ஊழல் வழக்குகள் உள்ளன என்பது குறித்த விவரங்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதித்யசோழன் என்பவர், தமிழக எம்.பி. - எம்.எல்.ஏ.க்கள் மீதான ஊழல் வழக்குகளின் விவரங்களை வழங்கக் கோரி தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் லஞ்ச ஒழிப்புத் துறை  எந்த தகவல்களையும் வழங்காததால் தமிழ்நாடு மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தகவல் ஆணையமும் எந்த நடவடிக்கையையும் எடுக்காததால் வழக்கறிஞர் ஆதித்யசோழன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் தொடர்ந்தார். 

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுதாரரின் விண்ணப்பம் மீது 12 வாரங்களில்  உத்தரவு பிறப்பிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட மாநில தகவல் ஆணையர் ஷகீல் அக்தர்,  மனுதாரர் கோரிய தகவல்களை ஒரு மாதத்தில் வழங்க வேண்டும் என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்டார்.

Night
Day