மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி கடல் பகுதியில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

குமரி கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் மன்னார்குளைகுடா குமரி கடல் அதனை ஒட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனை மீறி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற படகுகளின் உரிமையாளர்களுக்கு மீன்வளத்துறை சார்பில் விசாரணைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Night
Day