43 வயதில் கிராண்ட்ஸ்லாம் : போபண்ணா சாதனை, வயது ஒரு தடையல்ல - போபண்ணாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரோகன் போபண்ணாவை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ரோகன் போபண்ணா இணை சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது. இந்த வெற்றி மூலம், போபண்ணா 43 வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வெற்றிபெற வயது ஒரு தடையில்லை என்பதை ரோகன் போபண்ணா மீண்டும் மீண்டும் நிருபித்துள்ளார் என்றும், அவரது எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Night
Day