திமுக வட்டச் செயலாளர் படுகொலை - உறவினர் கைது ; 4 பேருக்கு வலைவீச்சு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரையில் திமுக வட்ட செயலாளர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். எம்.கே.புரத்தை சேர்ந்த திருமுருகன் என்பவர், 78-வது வார்டில் திமுக வட்ட செயலாளராக இருந்து வந்தார். இவர் நேற்றிரவு தனது வீட்டு திண்ணையில் அமர்ந்திருந்தபோது, பயங்கர ஆயுதங்களுடன் வந்த 5 பேர் திருமுருகனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். இதில் படுகாயமடைந்த திருமுருகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விசாரணையில் திருமுருகனின் சித்தாப்பா மருமகனுக்கு கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவரை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள 4 பேரை தேடி வருகின்றனர்.

Night
Day