ராகுலுக்கு பதிலாக தேவ்தத் படிக்கல் இந்திய அணியில் சேர்ப்பு - பிசிசிஐ

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முன்னணி வீரர் கே.எல்.ராகுல் விலகிய நிலையில், இளம்வீரர் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள், ராஜ்கோட்டில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய கே.எல்.ராகுல், காயம் காரணமாக 2வது போட்டியில் விளையாடவில்லை. 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், காயம் குணமடையாததால் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக இந்திய அணியில் தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. 

Night
Day