இந்தோனேஷியா : கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கி வீரர் பலியான பரிதாபம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தோனேசிய கால்பந்து வீரர் ஒருவர் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த போது மின்னல் தாக்கி உயிரிழக்கும்  வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

செப்டைன் ரஹர்ஜா என்ற அந்த கால்பந்து வீரர், மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற நட்புரீதியான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது நடந்து செல்லும் அவர் மீது திடீரென பெரும் தீ ஜ்வாலையுடன் மின்னல் தாக்கவே அப்படியே தரையில் விழுகிறார். உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட போதும் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Night
Day