பெங்களூருவில் 2-வது மகளிர் பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடர் கோலாகல தொடக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இரண்டாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் பெங்களூரில் நேற்று கோலாகலமாக துவங்கியது. ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரை போன்று பெண்களுக்கான பிரீமியர் லீக் எனும் WPL தொடரை கடந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் அறிமுகம் செய்தது. கடந்தாண்டு நடைபெற்ற இறுதி போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் 2-வது மகளிர் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்த தொடக்கவிழாவில் ஷாருக்கான், ஷாகித்கபூர் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பலர் பங்கேற்றனர்.

varient
Night
Day