கேப்டன் ரிஷப் மட்டுமின்றி மொத்த டெல்லி அணிக்கும் அபராதம் விதிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தாமதமாக பந்துவீசியதால், கேப்டன் ரிஷப் பண்டிற்கு மட்டுமின்றி மொத்த டெல்லி அணிக்கும் ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் விதித்துள்ளது. ஐபிஎல் போட்டியில் டெல்லியை எதிர்கொண்ட கொல்கத்தா அணி ஐபிஎல் வரலாற்றில் 2வது அதிகபட்ச ரன்களை குவித்தது. கொல்கத்தா வீரர்களின் அதிரடி பேட்டிங்கால், ரிஷப் பண்ட் தலைமையிலன டெல்லி அனி பந்துவீச தாமதமானது. இதனால் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்க்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணிக்கு எதிரான கடந்த போட்டியிலும் பந்துவீச தாமதமானதால் ரிஷப் பண்டிற்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருந்தது. தற்போது 2வது முறையாக குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசத் தவறியதால் மொத்த டெல்லி அணி வீரர்களுக்கும், போட்டிக்கான சம்பளத்திலிருந்து 25 சதவீதம் அபராதம் விதித்துள்ளது, ஐ.பி.எல். நிர்வாகம்.

Night
Day