எழுத்தின் அளவு: அ+ அ- அ
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் ஓபன் பிரிவு போட்டியில் வரலாற்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த உலக சாம்பியன் குகேஷுக்கு அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா தமது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், நார்வேயில் ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வரும் கிளாசிக்கல் சர்வதேச செஸ் ஓபன் பிரிவு போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடப்பு உலக சாம்பியனான குகேஷ்,
5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சனை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளதற்கு தமது இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
உலகின் முதல் நிலை செஸ் வீரரான மேக்னஸ் கார்ல்சனை வென்றதன் மூலம் குகேஷ் தமிழ் மண்ணிற்கே பெருமை சேர்த்துள்ளதாகவும், இது குகேஷின் விடாமுயற்சிக்கும், தன்னம்பிக்கைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி ஆகும் என்றும் புரட்சித்தாய் சின்னம்மா புகழாரம் சூட்டியுள்ளார்.
உலக செஸ் சாம்பியன் குகேஷ் மென்மேலும் பல வெற்றிகளை பெற்று வாழ்க்கையில் மிகப்பெரிய உச்சத்தை அடைய வேண்டும் என எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுவதாக புரட்சித்தாய் சின்னம்மா தெரிவித்துள்ளார்.