ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: பெங்களூரை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ஜோஸ் பட்லரின் அதிரடி சதத்தின் மூலம், பெங்களூரை வீழ்த்தி ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

நேற்றைய ஐபிஎல் போட்டியில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, பேட்டிங் செய்த பெங்களூரு அணி, விராட் கோலியின் அபார சதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 183 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில், கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடியாக விளையாடினர். கடைசி வரை களத்தில் நின்று கலக்கிய ஜோஸ் பட்லர் சிக்சர் அடித்து அணியை வெற்றி இலக்கை எட்ட வைத்ததுடன், தனது 100ஆவது போட்டியில் சதமடித்து அசத்தினார். இதன்மூலம் ராஜஸ்தான் அணி, 19 புள்ளி 1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 189 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது.

Night
Day