ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் புகுந்த மழைநீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

ராமநாதபுரத்தில் பெய்து வரும் பலத்த மழையால் அரசு தொழிலாளர் மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

செட்டியார் தெரு பகுதியில் இயங்கி வரும் தமிழக அரசுக்கு சொந்தமான தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனையில் மழை நீர் புகுந்தது. இதனால் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் நோயாளிகளும் அங்கு பணிபுரியும் மருத்துவ பணியாளர்களும் அவதி அடைந்துள்ளனர். எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக தாழ்வான பகுதிகளில் மழை நீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Night
Day