"இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளோம்"

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குட் பேட் அக்லி திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையால் பாதிக்கப்பட்டுள்ளதாக, படத்தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

குட் பேட் அக்லி திரைப்படத்தில், தன் அனுமதியில்லாமல், தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி இளையராஜா தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அந்த பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அந்த பாடல்களின் உரிமையை சோனி நிறுவனத்திடம் இருந்து பெற்று பயன்படுத்தியதாகவும் தற்போது அந்த பாடல்களை  திரைப்படத்தில் இருந்து நீக்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.  

Night
Day