மருத்துவம்
தவறான சிசிக்சையால் 4 வயது குழந்தை உயிரிழந்தாக பெற்றோர் புகார்
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயத?...
உலகில் முதன்முறையாக மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தை மனித உடலில் பொருத்தி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். 62 வயதான முதியவர் ஒருவர் நீரிழிவு சிகிச்சைக்காக அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் இறுதி நிலை சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள், 4 மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் அவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தினர். பன்றியின் சிறுநீரகம் பொருத்தப்பட்ட முதியவர் தற்போது நன்றாக உடல்நலம் தேறி வருவதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. இந்தப் புதிய சிறுநீரகம் பல ஆண்டுகள் வரை நீடிக்கும் என மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
சென்னை முகப்பேரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் 4 வயத?...
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...