சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தலைமை காவலர் போக்சோவில் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலையில் 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தனிப்பிரிவு தலைமை காவலர் போக்சோவில் கைதாகியுள்ளார். 

கல்வராயன் மலை கரியாலூர் காவல் நிலையத்தில் பணியாற்றும் தனிப்பிரிவு தலைமை காவலர் பிரபு, 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் தலைமை காவலர் பிரபுவை கச்சராபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்த போது அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தது நிரூபணமாகி உள்ளது. குற்றம் உறுதியானதை தொடர்ந்து தலைமை காவலர் பிரபு மீது போக்சோ உள்ளிட்ட 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். 

varient
Night
Day