வாக்கு சாவடிகளில் பந்தல், குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் - அதிகாரிகளுக்கு, தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கடிதம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பந்தல்கள் அமைத்து வாக்காளர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என, அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும்  தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் வரும் 19ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் 68 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கோடைவெயில் வாட்டி வதைத்து வருவதால், அனைத்து வாக்கு சாவடிகளிலும் பந்தல்கள் அமைக்கப்பட்டு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் ஊரக வளர்ச்சி, நகராட்சி நிர்வாகம், பொதுப்பணித்துறைகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாகு கடிதம் எழுதியுள்ளார். 

Night
Day