திருச்சி : நூதன முறையில் காலணியில் மறைத்து ரூ.32 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்சி விமான நிலையத்தில் திரைப்பட பாணியில் காலணியில் மறைத்து கடத்திவரப்பட்ட 32 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசியாவில் இருந்து திருச்சி வந்தடைந்த விமான பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ஒருவர் அணிந்திருந்த காலணியில் தங்கம் மறைத்து கடத்திவரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 491 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

varient
Night
Day