தமிழகத்தில் ஏப்.15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தமிழகத்தில் 4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 15-ம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

4-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10 மற்றும் 12-ஆம் தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகள், ஏப்ரல் 22 மற்றும் 23 தேதிகளுக்கு மாற்றி வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12-ம் தேதிவரை மாணவர்களை தேர்வுக்கு ஆயத்தப்படுத்தும் பணியை ஆசிரியர்கள் மேற்கொள்ளலாம் என்றும், அதன் பின்னர் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணிகள் உள்ளதால் ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதிவரை  மாணவர்களுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Night
Day