மதுரை: தொடக்கப்பள்ளியில் கட்டுமான பணிகள் - வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் தவிப்பு

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள தொடக்க பள்ளியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் மாற்று இடமின்றி கோயில் வளாகத்தில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.  நேசனேரி கிராமத்தில் ஊராட்சி ஓன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடம் சேதமடைந்த நிலையில், புதிய கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பழைய கட்டிடம் இடிக்கப்பட்டதால் வகுப்பறைகள் இன்றி மாணவர்கள் கோயில் வளாகத்தில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கு தேவையான தற்காலிக இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் ஒதுக்கி தரவில்லை என்றும் பள்ளி கட்டிடம் கட்டும் வரை மாணவர்களுக்கு தற்காலிக இடத்தை வழங்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். 

varient
Night
Day