பொங்கல் விடுமுறை - கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் கூடிய குளிர்ச்சியான சூழல் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கொடைக்கானலின் முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் பாயிண்ட், பைன் மரக்காடுகள், குணா குகை, தூண்பாறை, பிரையன்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். சுற்றுலா பயணிகளின் வருகையால் கொடைக்கானல் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

Night
Day