சென்னை - விடிய விடிய பறக்கும் படை சோதனை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ள நிலையில், தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரொக்கம் பணத்தை பறிமுதல் செய்த பறக்கும் படை அதிகாரிகள், கட்சி கொடி கம்பங்களையும், போஸ்டர்களையும் அகற்றினர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ராமபட்டிணத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட  3 லட்சத்து 37 ஆயிரத்து 400 ரூபாயை பறக்கும்படை குழுவினர் பறிமுதல் செய்தனர். ஒரே நாளில் முறையான ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட 42 லட்சத்து, 26 ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கோபாலபுரத்தில் 2 லட்சம், பாலக்காடு சாலை நல்லூர் கைகாட்டி அருகே  2 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் என மொத்தம், 42 லட்சத்து 20 ஆயிரத்து 900 ரூபாயை பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

Night
Day