கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து தென்மாவட்டங்களுக்கு இன்றுமுதல் TNSTC பேருந்துகள் இயக்கப்படாது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தென் மாவட்டங்களுக்கு செல்லும் அரசு விரைவுப் பேருந்துகள் அனைத்தும் இன்று முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது. இது தொடர்பாக போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு தற்போது இயக்கப்பட்டு வரும் TNSTC கழகப் பேருந்துகளில் 710 பேருந்துகள் இன்று முதல் கிளாம்பாக்கத்திலிருந்தும் 160 பேருந்துகள் மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளதாக கூறியுள்ளது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை அதிகப்படியான பேருந்துகளும், அதன்பிறகு பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. பயணிகள் இனி கோயம்பேடு பேருந்து நிலையம் செல்ல வேண்டாம் என்றும் வலியுறுத்தியுள்ளது.

varient
Night
Day