முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படை வீரர்கள், பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி டில்லி விஜய் சவுக்கில் நடைபெற்றது.

குடியரசு தின விழா அணிவகுப்பு முடிந்த மூன்றாவது நாள், அதில் பங்கேற்ற முப்படை வீரர்கள் தங்கள் பாசறைக்கு திரும்பும் நிகழ்வு நடப்பது வழக்கம். வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த நிகழ்வு டெல்லியில் உள்ள விஜய் சவுக்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தங்கர், பிரதமர் மோடி, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பாசறை திரும்பும் நிகழச்சியில், ராணுவம், கடற்படை, விமானப்படை, மாநில காவல்துறை, மத்திய ஆயுதப்படை வீரர்கள், டிரம்ஸ் இசைக்குழுவினர் ஒய்யாரமாக அணிவகுப்பு நடத்தினர். மேலும்  தேசப்பற்று பாடல்கள் இசைத்தப்படி அணிவகுப்பு நடைபெற்றது. சக்ரவியூகம், வசுதேவ குடும்பகம் வடிவில் வீரர்கள் அணிவகுப்பு நடத்தியது காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது.

Night
Day