ராஷ்மிகா மந்தனா டீப் ஃபேக் வீடியோ வெளியிட்டவர் கைது : டெல்லி காவல்துறைக்கு நன்றி - நடிகை ராஷ்மிகா மந்தனா

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டீப் ஃபேக் வீடியோ வெளியிட்டவரை கைது செய்ததற்கு நடிகை ராஷ்மிகா மந்தனா நன்றி தெரிவித்துள்ளார். நடிகை ராஷ்மிக மந்தனாவின்  டீப் ஃபேக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, போலீசார் தீவிர விசாரணை நடத்திய நிலையில், வீடியோவை வெளியிட்ட ஆந்திராவை சேர்ந்த நவீன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக டெல்லி போலீசாருக்கு நன்றி தெரிவித்தள்ள நடிகை ராஷ்மிகா மந்தனா, தன்னை அன்புடனும், ஆதரவுடனும் அரவணைக்கும் சமூகத்திற்கு உண்மையிலேயே நன்றியுள்ளவளாக உணர்கிறேன் என்று தெரிவித்தார். 

Night
Day