இங்கிலாந்துக்கு 'பேஸ்-பால்' என்றால் இந்தியாவுக்கு 'விராட் பால்' - சுனில் கவாஸ்கர்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் பேஸ்-பால் அணுகுமுறையை எதிர்கொள்ள தங்கள் வசம் 'விராட் பால்' இருப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். 'விராட்பால்' என அவர் இந்திய வீரர் விராட் கோலியின் திறன்களை குறிப்பிட்டு சுனில் கவாஸ்கர் பேசியிருப்பது கிரிக்கெட் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. விராட் கோலியின் பேட்டிங் சிறப்பாக இருப்பதாகவும் விராட் கோலி ரன்களை சதமாக மாற்றுவதில் அபார திறன் கொண்டவர் எனவும் கவாஸ்கர் கூறினார். கடந்த ஒன்று இரண்டு ஆண்டுகளாக இங்கிலாந்து அணி பேஸ்பால் ஆட்டம் ஆடி வருவதாகவும், அந்த பாணி இந்தியாவுக்கு எதிராக எந்த அளவுக்கு கைகொடுக்கும் என்பதை இந்த தொடரில் பார்க்க முடியும் என்றும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்

Night
Day