குவைத் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதிச்சுற்று போட்டி : ராய்ஸா தில்லன் வெள்ளிப் பதக்கம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

குவைத்தில் நடைபெறும் ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் ஆசிய தகுதிச்சுற்று போட்டியில் இந்தியாவின் ராய்ஸா தில்லன் வெள்ளிப் பதக்கம் வென்று, பாரீஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்றார். இத்துடன் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதிபெற்ற இந்திய துப்பாக்கி சுடுதல் போட்டியாளா்களின் எண்ணிக்கை 18-ஆக அதிகரித்துள்ளது. மகளிர் ஸ்கீட் பிரிவில் பங்கேற்ற ராய்ஸா, 60 இலக்குகள் கொண்ட இறுதிச்சுற்றில் 52 இலக்குகளை சுட்டு வீழ்த்தி 2-ஆம் இடம் பிடித்தார். சீனாவின் ஜின்மெய் காவ் 56 இலக்குகளை துல்லியமாக தகா்த்து தங்கம் வெல்ல, மற்றொரு இந்தியரான மகேஷ்வரி சௌஹான் 43 இலக்குகளுடன் வெண்கலப் பதக்கம் பெற்றார். மேலும் ஒரு இந்தியரான கனிமத் செகோன் 30 இலக்குகளை தகா்த்து 4-ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. 

Night
Day