விழுப்புரம் : கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே கடும் மோதல் - 2 மாணவர்கள் படுகாயம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விழுப்புரத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர் காயமடைந்தனர். விழுப்புரம் காமராஜர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பழைய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்தனர். அப்போது கஞ்சா போதையில் அங்கு வந்த அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் சிலர்  பள்ளி மாணவர்களிடம் தகராறு செய்தனர். அப்போது ஏற்பட்ட மோதலில் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 12 ஆம் வகுப்பு மாணவர் அபினேஷ் என்பவருக்கும், கல்லூரி மாணவர் ஒருவருக்கும் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார் காயமடைந்த மாணவர்களை மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Night
Day