மூடநம்பிக்கையால் கங்கை நதியில் "சிறுவனை கொலை" செய்த பெண்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மறுபிறவி கிடைக்கும் என நம்பி ஹரித்வாரில் பெற்ற குழந்தையை தாய் தந்தையே கங்கையில் மூழ்கடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கையில் புனித நீராடிய குடும்பத்தினர் 7 வயது சிறுவனை நீண்ட நேரம் நீரில் மூழ்க வைத்துள்ளனர். இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் சிறுவனை மீட்ட நிலையில் சிறுவன் உயிரிழந்தான். இது குறித்து போலீசார் நடத்தி விசாரணையில், சிறுவனை கொன்றது தாய், தந்தை மற்றும் அத்தை என்பது தெரியவந்தது, மேலும், சிறுவனுக்கு ரத்த புற்று நோய் இருந்ததால் அவனை காப்பாற்ற முடியாது என மருத்துவர்கள் கைவிரித்ததாகவும், கங்கையில் மூழ்கடித்தால் மறுபிறவி கிடைக்கும் என சிலர் கூறியதால் இவ்வாறு செய்தாகவும் தெரிவித்தனர். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Night
Day