மு.க.அழகிரி வழக்கில் 12-ம் தேதி தீர்ப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

2011 சட்டமன்ற தேர்தலின் போது, தாசில்தாரை தாக்கிய வழக்கு தொடர்பாக தி.மு.க முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி உள்ளிட்டோர் நேரில் ஆஜராகினர்.

மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள வெள்ளலூர் அம்பலக்காரன்பட்டி வல்லடிகாரர் கோயிலுக்குள், வாக்காளர்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து நிகழ்விடத்திற்கு சென்ற மேலூர் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து மற்றும் தேர்தல் அலுவலர்கள், அங்கு வீடியோ எடுத்தனர். இதற்கு மு.கஅழகிரி தரப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்து அழகிரியுடன் இருந்தவர்கள் தன்னை அடித்து, உதைத்ததாக தாசில்தார் காளிமுத்து புகார் செய்தார். இது தொடர்பான வழக்கு விசாரணை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி முத்துலட்சுமி முன்பாக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க. அழகிரி உள்ளிட்டோர் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி  தீர்ப்பை வரும் 12 ஆம் தேதி ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Night
Day