அபிஷேக் கோசல்கர் கொலை : எம்.பி. சஞ்சய் ராவத் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அபிஷேக் கோசல்கர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள எம்.பி. சஞ்சய் ராவத், மகாராஷ்டிராவில் குண்டர்களின் ஆட்சி நடப்பதாகவும், மாஃபியாவின் ஆட்சி நடப்பதாகவும் குற்றம்சாட்டினார். 

ஏக்நாத் சிண்டே ஆசீர்வாதத்தில், மாஃபியா அரசு சிறப்பாக செயல்படுவதாக பகிரங்கமாக பேசியுள்ள அவர், இதைப் பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க முடியாது என கூறியுள்ளார். இப்போது, அமலாக்கத்துறை, சி.பி.ஐ. ஆகியோர் எங்கே போனார்கள் என்றும் கேள்வி எழுப்பினார். அபிஷேக் கோசல்கரின் கொலையை நடத்திய குண்டர்களின் அரசுக்கு, பிரதமரும், உள்துறை அமைச்சரும் பொறுப்பாளர்கள் என்றார்.

Night
Day