மாணவியின் தலை முடியை பிடித்து இழுத்து சென்ற பெண் போலீஸ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தெலங்கானா மாநிலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பெண் போலீஸ் மாணவி ஒருவரின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய நீதிமன்ற அலுவலகம் கட்ட அம்மாநில அரசு முடிவு செய்தது. இதற்கு, பல்கழைக்கழக மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்ல கூறியும், மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டினர். அப்போது, அங்கிருந்து தப்பி ஓடிய மாணவியை, இரண்டு இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்று மாணவியின் தலை முடியை பிடித்து தரதரவென இழுத்து சென்றனர்.

varient
Night
Day